ADDED : ஜூன் 02, 2025 03:54 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி ஊராட்சிகோட்டை தலைமை நீரேற்று நிலையத்தில், இன்று மற்றும் நாளை பராமரிப்பு பணி நடக்கிறது.
இதனால் சூரியம்பாளையம் நீரேற்று நிலையத்தில் இருந்து மெயின் குழாய் வழியாக குடிநீர் வழங்கும் பகுதிகளுக்கு, இரு நாட்களும் குடிநீர் வழங்க இயலாது. பராமரிப்பு பணி முடிந்த பிறகே குடிநீர் வினியோகம் செய்யப்படும் என்று, மாநகராட்சி துணை கமிஷனர் தனலட்சுமி கேட்டு கொண்டுள்ளார்.
