ADDED : மார் 14, 2026 05:00 AM
ஈரோடு: கோடை காலம் துவங்கியதால், ஈரோடு நேதாஜி மார்க்கெட் பழ மண்டிக்கு, தர்பூசணி வரத்து சில நாட்களுக்கு முன் அதிகரித்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில் வரத்து குறைந்து, விலை அதிகரித்துள்ளது.
இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கோடை சீசன் துவங்கும் முன்பே, வெயில் சுட்டெரித்து வருவதால் தர்பூசணி நுகர்வு அதிக-ரித்துள்ளது. கடந்தாண்டு தர்பூசணி ஊசி மூலம் வர்ணம் சேர்க்கப்-படுவதாக எழுந்த சர்ச்சையால் சாகுபடி சற்று குறைந்தது. இதனால் நடப்பாண்டு விளைச்சல் குறைந்து, தற்போது வரத்தும் குறைந்துள்ளது. ஈரோடு மார்க்கெட்டுக்கு சீசன் நேரம், 16 முதல், 20 டன் வரை தினமும் வரத்தாகும். தற்போது திண்டிவனம் பகு-தியில் இருந்து மட்டும், 10 டன் வரத்தாகிறது. தேவை அதிக-ரிப்பால் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ, 23 ரூபாய்க்கு நேற்று விற்றது. இவ்வாறு கூறினர்.

