/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.6.32 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்
/
ரூ.6.32 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : ஜூன் 19, 2025 01:41 AM
ஈரோடு, ஈரோடு யூனியன், எலவ
மலையில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. ஈரோடு ஆர்.டி.ஓ., ரவி வரவேற்றார். 55 பயனாளிகளுக்கு, 6.32 லட்சம் ரூபாய் மதிப்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் ராஜகோபால் சுன்கரா பேசியதாவது:
இப்பகுதியில் நடந்த, மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு, 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும். தற்போதைய மனுநீதி நாளில் பெறப்படும் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்தி, தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்படும். இங்கு மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டு
மனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து, 97 மனுக்கள் பெறப்பட்டுள்ளன.
அங்கு சமூக நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், தோட்டக்கலை துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் கருத்து காட்சி அரங்கு அமைத்துள்ளனர். அவற்றை பார்வையிட்டு அரசின் திட்டங்களில் பயன் பெறலாம்.
இவ்வாறு பேசினார்.
சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் செல்வராஜ், தொழிலாளர் உதவி ஆணையர் முருகேசன், உதவி இயக்குனர் (பஞ்.,க்கள்) உமாசங்கர், தாசில்தார் முத்துகிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.