/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.45.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்கம்
/
ரூ.45.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்கம்
ரூ.45.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்கம்
ரூ.45.26 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட பணிகள் தொடக்கம்
ADDED : பிப் 03, 2026 08:10 AM
காங்கேயம்: காங்கேயம் ஊராட்சி ஒன்றியம் மறவபாளையம் ஊராட்சி, மறவபாளையத்தில் கனிமம் மற்றும் சுரங்கம் திட்டத்தில், 23 லட்சம் ரூபாய் மதிப்பில், 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி,
கீரனுார் ஊராட்சி காமாட்சிபுரத்தில், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், 30,000 லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி மற்றும் 4.26 லட்சம் ரூபாய் மதிப்பில், 65 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும்பணி என, 45.26 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகளை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைமை பொதுக்குழு உறுப்பினர் கார்த்திகேயன், வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் கருணைபிரகாஷ், காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

