sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் 120 இடங்களில் நலத்திட்டம்; எம்.பி., தகவல்

/

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் 120 இடங்களில் நலத்திட்டம்; எம்.பி., தகவல்

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் 120 இடங்களில் நலத்திட்டம்; எம்.பி., தகவல்

தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள் 120 இடங்களில் நலத்திட்டம்; எம்.பி., தகவல்


ADDED : நவ 27, 2025 02:09 AM

Google News

ADDED : நவ 27, 2025 02:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல், 'தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளையொட்டி, 120 இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது' என, நாமக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜேஸ்குமார் எம்.பி., தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: நாமக்கல் கிழக்கு மாவட்ட, தி.மு.க. சார்பில், தமிழக துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாள், இன்று, நாளை என, இரண்டு நாட்கள் கொண்டாடப்பட உள்ளது. அதன்படி, இன்று, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தங்க மோதிரம் அணிவிக்கப்படும். இதேபோல், ஒன்றிய, நகர, பேரூர் கழகம் மற்றும் சார்பு அணிகள் சார்பில், இன்றும், நாளையும், 120 இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியும், கொடியேற்ற விழாவும் நடக்கிறது.

அதன்படி, நாமக்கல் கிழக்கு நகரத்தில், துாய்மை பணியாளர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்குதல்; பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு, புத்தகம் வழங்குதல்; ஆதரவற்ற குழந்தைகளுக்கு இனிப்பு வழங்குதல்; அங்கன்வாடி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதேபோல், மேற்கு நகரத்தில், பொதுமக்களுக்கு காலை உணவு, மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்குதல்; துாய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி; தெற்கு நகரத்தில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு நாற்காலி, பாய், மின்விசிறி வழங்குதல்

உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ராசிபுரத்திலும்...

ராசிபுரத்தில்,

முதியோர்களுக்கு வேட்டி, சேலை வழங்குதல் என, ஒவ்வொரு ஒன்றியத்திலும், ஐந்து இடங்களில் நலத்திட்ட உதவி வழங்கும்

நிகழ்ச்சி நடக்கிறது.

இதேபோல், சார்பு அணிகள் சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வரின் பிறந்த நாளையொட்டி, அனைத்து பகுதிகளிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என எம்.பி., ராஜேஸ்குமார் கேட்டு கொண்டுள்ளார்.






      Dinamalar
      Follow us