ADDED : டிச 17, 2025 07:19 AM
ஈரோடு: ஈரோடு, திண்டல், வி.இ.டி., கலை அறிவியல் (இருபாலர்) கல்-லுாரி, சுதா மருத்துவமனை மற்றும் சிற்றுளி அறக்கட்டளை இணைந்து, மாற்றுத் திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி மாரத்தான்-25 போட்டி, வி.இ.டி., கல்லுாரியில் நடந்தது. கலெக்டர் கந்தசாமி, வேளாளர் கல்வி நிறுவனங்கள் செயலாளர் சந்திரசேகர், நிர்வாகி பாலசுப்பிரமணியன், சுதா மருத்துவமனை மேலாண்மை இயக்குநர் சுதாகர் தொடங்கி வைத்தனர்.
ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியாக மூன்று பிரிவுகளில் போட்டி நடந்-தது. வேளாளர் கல்வி நிறுவங்களின் செயலாளர் சந்திரசேகர், நிர்-வாகிகள் பாலசுப்பிரமணியன், யுவராஜா, வி.இ.டி., கல்லுாரி முதல்வர் நல்லசாமி, புல முதன்மையர் லோகேஷ்குமார் அனைவ-ரையும் பாராட்டினர். நிகழ்வில், 900க்கும் மேற்பட்ட போட்டியா-ளர்களும், 60க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்-றனர். முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்-கப்பட்டது.

