ADDED : ஏப் 09, 2026 03:41 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: கொடுமுடி காசிபாளையம் ஜெ.ஜெ. நகர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் ஷாஜகான், 39. கரூர் ரயில்வே போலீஸ் ஏட்டு. இவர் மனைவி சபினா பேகம், 33. கடந்த 7ம் தேதி காலை கடைக்கு சென்று முட்டை வாங்கி வருவதாக கூறி, வீட்டில் இருந்து வெளியே சென்றார்.
இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், அக்கம் பக்கத்தில் விசாரித்தும் தகவல் இல்லை. இதுகுறித்து ஷாஜகான் அளித்த புகாரின் பேரில், கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
