ADDED : செப் 15, 2026 07:12 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:பவானி காமராஜ்
நகர் முதலாவது வீதியை சேர்ந்த முருகேசன் மனைவி நித்யா, 37; ஈரோட்டில்
ஒரு துணிக்கடையில் ஒரு வாரமாக வேலை செய்தார். முன்னதாக இரு கடைகளில்
வேலை பார்த்துள்ளார்.
ஒரு கடையில் பணியாற்றியபோது அசேன்
என்பவருடன் தகராறு ஏற்பட்டதால் வேலைக்கு செல்வதை நிறுத்தி விட்டார்.
கடந்த, 12ம் தேதி காலை வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
பல இடங்களில் தேடியும் மனைவி குறித்து தகவல் இல்லை. முருகேசன்
புகாரின்படி ஈரோடு டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.
