sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'

/

'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'

'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'

'தொழில் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்தும்'


ADDED : நவ 11, 2024 07:58 AM

Google News

ADDED : நவ 11, 2024 07:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ராஜமாணிக்கம் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். குறிப்பாக பெருந்துறையில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்தனர். அவர்களில் சொந்த ஊருக்கு சென்ற பெரும்பாலானோர் ஈரோடு திரும்பவில்லை.

இதற்கான காரணம், மத்திய அரசின் சிறப்பு திட்டங்களால், பீகார், ஒடிசா, மத்தியபிரதேசம், ஜார்க்கண்ட என அந்தந்த மாநிலங்களிலேயே தொழில் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான தொழிலாளர், தங்களின் சொந்த மாநிலத்திலேயே பணிபுரிய முடிவெடுத்துள்ளனர். தமிழகத்தின் தொழில் வளர்ச்சியில் இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இவ்விவகாரத்தில் உரிய கவனம் செலுத்தி, தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்க வேண்டும்.

வடமாநில தொழிலாளர்களுக்கு சாதகமான சலுகைகளை தமிழக அரசு வழங்கினால், அவர்கள் தமிழகத்திற்கு வர வாய்ப்புகள் அதிகம். அத்துடன் தொழில்துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு சாதகமான அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us