ADDED : அக் 28, 2025 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு மாவட்டம் கணபதிபாளையம், பிரதான வீதியை சேர்ந்தவர் ரமேஷ். இவருக்கு கொடுமுடி அருகே கல்லன்காட்டில் தோட்டமும், கிணறும் உள்ளது.
கடந்த, 26 மாலையில் தோட்டத்தில் இருந்து கால்நடைகளுக்கு பசுந்தீவனம் பறிக்க சென்றபோது, அங்குள்ள கிணற்றில், 65 வயது பெண் இறந்த நிலையில் சடலமாக கண்டார். அவர் பச்சை, பிரவுன் பூப்போட்ட சேலை, பச்சை சட்டை, நீல பாவடை அணிந்திருந்தார். அவர் யார், எந்த ஊர் எனத்தெரியவில்லை. கொடுமுடி போலீசார் விசாரிக்கின்றனர்.

