ADDED : டிச 15, 2024 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெண்ணிடம் தாலி பறிப்பு
தாராபுரம், டிச. 15-
தாராபுரம் மாருதி நகரை சேர்ந்த ரங்கநாதன் மனைவி புவனேஸ்வரி, 37; வீட்டு வேலை செய்து வரும் இவர், நேற்று முன்தினம் காலை வேலைக்கு செல்ல, ஜீவா காலனி பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார். அப்போது பைக்கில் வந்த இருவர், தாலி சங்கிலியை பறித்துச் சென்றனர். புகாரின்படி தாராபுரம் போலீசார், பைக் கொள்ளையரை தேடி வருகின்றனர். விசாரணையில், புவனேஸ்வரி போட்டிருந்தது கவரிங் என்பதும், தாலி மட்டுமே முக்கால் பவுன் என்பதும் தெரிய வந்தது.