ADDED : மார் 03, 2026 04:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கேயத்தில் பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம், பைக் கொள்ளையர், தாலிக்கொடி பறித்த சம்பவம், மக்கள் மத்-தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காங்கேயம், பழையகோட்டை ரோடு, கணபதி நகரை சேர்ந்த ரங்கராஜ் மனைவி கற்பகம், 55; உறவினர் வீட்டுக்கு செல்ல கண-வருடன் டூவீலரில் காங்கேயத்துக்கு நேற்று காலை, 10:00 மணிக்கு சென்றார். பெஸ்ட் மெடிக்கல் பகுதியில் கணவர் இறக்கி விட்டுள்ளார். அங்கிருந்து நடந்து சென்ற கற்பகத்தை பின் தொடர்ந்து, யமாஹா பைக்கில் வந்த இருவர், அவர் போட்டி-ருந்த மூன்றரை பவுன் தாலிக்கொடியை பறித்து தப்பினர்.இதில் நிலைகுலைந்து கற்பகம் கீழே விழுந்தார். இதுகுறித்த புகாரின்படி காங்கேயம் போலீசார், தாலி பறித்த பைக் கொள்ளை-யரை தேடி வருகின்றனர்.

