/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
/
மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி
UPDATED : அக் 24, 2024 03:32 AM
ADDED : அக் 24, 2024 01:29 AM
ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில், மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும், மகளிர் குழுக்களின் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்தும் கண்காட்சி விற்பனை வரும், 25 முதல் நவ., 3 வரை, 10 நாட்கள் ஈரோடு, குமலன்குட்டை, பூமாலை வணிக வளாகத்தில் நடக்க உள்ளது. மகளிர் குழுவின் கைவினை பொருட்கள், மண்பாண்டங்கள், பவானி ஜமுக்காளம், சென்னிமலை
பெட்ஷீட், கைத்தறி சேலைகள், பட்டுப்புடவை, துண்டுகள், ஆயத்த ஆடைகள், கால் மிதியடி, பேன்சி பொருட்கள், காட்டன் பை, சணல் பை, மரச்செக்கு எண்ணெய், சிறு தானிய பொருட்கள், இயற்கை முறையில் விளைவித்த பழங்கள், வெல்லம், நாட்டு சர்க்கரை போன்றவை விற்பனைக்கு வைக்கப்படுகிறது. வரும், 25 முதல் நவ., 3 வரை, 10 நாட்கள் காலை, 11:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி மற்றும் விற்பனை நடக்கிறது.

