தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முறையாக குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

முறையாக குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்

முறையாக குடிநீர் கேட்டு பெண்கள் மறியல்


ADDED : நவ 15, 2025 03:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2025 03:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானிசாகர்: பவானிசாகர் யூனியன் தொப்பம்பாளையம் பஞ்., தொப்பம்பா-ளையத்தில், நுாற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்-றனர். இவர்களுக்கு பவானிசாகர் அணையிலிருந்து கூட்டு குடிநீர் திட்டம் மூலம், 15 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினி-யோகம் செய்யப்படுகிறது.

இதனால் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக கூறி, புன்செய்புளியம்-பட்டி-பவானிசாகர் சாலையில், பெண்கள் நேற்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர். பவானிசாகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பெண்கள் கூறியதாவது:

தொடக்கத்தில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வந்-தது, பின் நான்கு நாட்கள், ஒரு வாரம் என தற்போது, 15 நாட்க-ளுக்கு ஒரு முறையே தண்ணீர் வருகிறது. அதுவும் பாதி வீதிக-ளுக்கு மட்டும் கிடைக்கிறது. மீதி வீதிகளுக்கு வருவதில்லை.

குடிநீர் வாரியத்தில் கேட்டால் இவ்வளவுதான் தண்ணீர் வழங்க முடியும் என கூறுகின்றனர். போர்வெல் தண்ணீரும் வினியோகிப்-பதில்லை.

இவ்வாறு கூறினர்.

யூனியன் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறவே, மறியலை கைவிட்டு கலைந்து சென்-றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us