ADDED : மார் 08, 2026 07:58 AM

ஈரோடு:ஈரோடு
கலெக்டர் அலுவலகத்தில், உலக மகளிர் தின விழா கொண்டாடினர். கலெக்டர்
கந்தசாமி தலைமை வகித்தார். இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணி செய்யும்
பெண் அதிகாரிகள், ஊழியர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் மகளிர் தின
வாழ்த்து தெரிவிக்கப்பட்டு, மகளிரை போற்றுவோம் என்பது குறித்து
பேசினர். அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
விழாவில் எஸ்.பி.,
சுஜாதா, பயிற்சி உதவி கலெக்டர் காஞ்சன் சவுத்ரி, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட
இயக்குனர் பிரியா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தேன்மொழி
உட்பட பலர் பங்கேற்றனர்.
* கோபி வக்கீல் சங்கம் சார்பில் சர்வதேச
மகளிர் தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. கோபி மூன்றாவது கூடுதல்
மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமச்சந்திரன் தலைமை வகித்து பேசினார்.
நீதிபதிகள் பாலகிருஷ்ணன், சுவேதாரண்யன், தாயுமானவர்,
ருத்ரவாசுகி கலந்து கொண்டனர். தவிர வக்கீல் சங்க நிர்வாகிகள் உட்பட
பலர் பங்கேற்றனர். இதேபோல் கோபி அரசு மருத்துவமனையில் தலைமை
மருத்துவர் கல்யாணி தலை-மையில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

