ADDED : மார் 09, 2024 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோட்டில் இந்திய தொழிற்சங்க மையம் - சி.ஐ.டி.யு., சார்பில், சர்வதேச மகளிர் தின கருத்தரங்கு நடந்தது. உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழு மாவட்ட அமைப்பாளர் ஸ்ரீதேவி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் எஸ்.சுப்பிரமணியன், செயலாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பு குழு மாநில இணை அமைப்பாளர் மாலதி பேசினார்.
சமவேலைக்கு சம ஊதியம், 100 நாள் வேலை திட்டத்தை, 200 நாட்களாக மாற்றி, தினசரி கூலியாக, 600 ரூபாயாக வழங்க வேண்டும். சமூகத்தின் அனைத்து இடங்களிலும் பெண்கள் மீதான வன்முறையை தடுக்க வேண்டும். ஜாதி, ஆணவ கொலைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

