ADDED : ஜூலை 27, 2025 01:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், பவானி அடுத்த அம்மாபேட்டையை சேர்ந்தவர் செங்கோட்டையன், 60, கூலி தொழிலாளி. சென்னம்பட்டியை அடுத்த கருங்கரட்டில் ஒரு தனியார் குவாரி உள்ளது. இங்கு, 10 நாட்களாக பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
நேற்று மதியம் பணியில் ஈடுபட்டிருந்தபோது நெஞ்சு வலிப்பதாக கூரையிலிருந்து இறங்கியுள்ளார். முகம் கழுவ சென்றபோது வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தவர் இறந்து விட்டார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.