/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கட்டட பணியின் போது விழுந்த தொழிலாளி சாவு
/
கட்டட பணியின் போது விழுந்த தொழிலாளி சாவு
ADDED : மார் 07, 2024 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம், வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையத்தை சேர்ந்த முருகேசன், 43, கட்டட வேலை செய்யும் தொழிலாளி. நகராட்சி அலுவலகம் அருகே புதிய கட்டட கட்டுமான பணி நடந்து வருகிறது, இதன் மூன்றாவது மாடியில், முருகேசன் நேற்று முன்தினம் காலை வேலை செய்து கொண்டிருந்தபோது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, அருகில் இருந்தவர்கள் முருகேசனை மீட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

