ADDED : டிச 20, 2024 07:08 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு, அசோகபுரம், 16 ரோடு பகுதியில் சாலையோரமாக தண்ணீர் டேங்கர் டிராலி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதில் சாய்ந்தபடி ஒருவர் வெகுநேரமாக நின்றிருந்தார். அப்பகுதி மக்கள் தகவலின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் சென்றனர். அவரை தொட்டு பார்த்ததில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.
விசாரணையில் ஈரோடு, சூளை, பாரதிநகரை சேர்ந்த சதீஷ், 31, லேத் பட்டறை தொழிலாளி என தெரிந்தது. குடிபோதையில் சுற்றி திரிந்த நிலையில் இறந்துள்ளார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடலை அனுப்பி வைத்தனர்.
