ADDED : ஜூலை 22, 2025 02:02 AM
அ நிறம் | அளவு
கோபி, கோபி அருகே அரசூரை சேர்ந்தவர் தங்கராஜ், 37, கூலி தொழிலாளி; இவரின் மனைவி சங்கீதா, 32; தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வந்தார். வீட்டருகே கழிப்பிடத்துக்கான செப்டிக் டேங்க் குழி வெட்டப்பட்டுள்ளது.
அதில் தங்கராஜ் விழுந்து கிடப்பதாக, சங்கீதாவுக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது. சங்கீதா சென்று பார்த்தபோது, பேச்சு, மூச்சின்றி மயங்கி கிடந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்இறந்தார். தங்கராஜ் தவறி விழுந்து இறந்தாரா என்ற கோணத்தில், கடத்துார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
