/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
/
கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பலி
ADDED : ஜன 29, 2026 04:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி, அஞ்சூர் முத்து கவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளைசாமி, 61. பிறவியிலேயே வாய் பேசாதவர், காது கேளா-தவர். கட்டட தொழிலாளி. மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
கடந்த 20 வேலைக்கு செல்வதாக கூறி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கடந்த, 27 இரவு பொரசபாளையம் விருப்பச்சங்காட்டு தோட்ட கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி இறந்து போனதாக தகவல் கிடைத்தது. இதுகுறித்து அவர் மனைவி லட்சுமி அளித்த புகாரின் படி சிவகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.

