ADDED : மார் 17, 2026 04:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே குழாய் அடைப்பை சரி செய்ய, கிணற்றில் இறங்கிய தொழிலாளி பலியானார்.
தாராபுரத்தை அடுத்த தேர்பட்டியை சேர்ந்தவர் திருமலைசாமி, 42; உப்புத்துறைபாளையத்தில் உள்ள செல்வராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில், தண்ணீர் எடுக்கும் பைப்பில் ஏற்பட்ட அடைப்பை சரி செய்ய சின்னப்பன், 55, ரத்தினசாமி, 45, ஆகி-யோருடன், நேற்று முன்தினம் காலை சென்றார். மற்ற இருவரும் மேலே நின்றபோது, கிணற்றில் இறங்கிய திரும-லைசாமி படியில் மேலே ஏறி வந்த போது, எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். இதில் உடலில் அடிபட்டு பலி-யானார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

