ADDED : டிச 05, 2024 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் அருகே, பீஹாரை சேர்ந்த ரைஸ் மில் தொழிலாளி, கம்-பியில் மோதி உயிரிழந்தார்.
பீஹார் மாநிலம், மசாலா பகுதியை சேர்ந்தவர் பிரம்மா மஜி, 23. திருமணமான இவர், தாராபுரம், மீனாட்சிபுரம் அருகே உள்ள, வி.எஸ்.என். அரிசி ஆலையில் பணிபுரிந்து வந்தார். கடந்த, 1ல், ஆலை வளாகத்தில் வேலை செய்து கொண்டிருந்த-போது, அங்கிருந்த கம்பியில் தலை மோதியது.
படுகாயமடைந்த அவரை, கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த
பிரம்மா மஜி, சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.