ADDED : அக் 30, 2025 02:02 AM
கோபி, கோபி அருகே வேட்டைக்காரன் கோவில் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக கோபி போலீசாருக்கு நேற்று காலை தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்துக்கு விரைந்து, வீட்டில் இறந்து கிடந்த, 50 வயது மதிக்கத்தக்க ஆண் உடலை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், இறந்தவர் அதே பகுதியை சேர்ந்த பனியன் கம்பெனி தொழிலாளி தமிழ்ச்செல்வன், 49, என்பதும், அவருக்கு மோகனப்பிரியா என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இருப்பதும் தெரியவந்தது.
தமிழ்ச்செல்வன் போதைக்கு அடிமையானதால், அவரது மனைவி கடந்த நான்கு மாதத்துக்கு முன் பிரிந்து சென்றது தெரியவந்தது. கடந்த, 27ம் தேதி இரவு, தமிழச்செல்வன் போதையில் வீட்டுக்குள் சென்றதை அப்பகுதியினர் பார்த்துள்ளனர். இந்நிலையில் அவர் எவ்வாறு இறந்தார் என போலீசார் விசாரிக்கின்றனர்.

