தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'

கொலை முயற்சி வழக்கில் தொழிலாளிக்கு 10 'ஆண்டு'


ADDED : நவ 11, 2025 02:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 11, 2025 02:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி, அந்தியூரை அடுத்த கோவிலுாரை சேர்ந்தவர் தங்கராசு. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன், 52; கூலி தொழிலாளி. இருவருக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த, 2020 ஆக.,2 ம் தேதி கோவிலுாரில் மாமா சின்னசாமி கட்டிவரும் வீட்டில் தங்கராசு கட்டிலில் படுத்து துாங்கி கொண்டிருந்தார். அங்கு சென்ற முருகன் அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார்.

இதில் லேசான தீக்காயத்துடன் தங்கராசு தப்பினார். வெள்ளிதிருப்பூர் போலீசார் முருகனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு, பவானி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. நீதிபதி ஹரிஹரன் நேற்று தீர்ப்பளித்தார். முருகனுக்கு, 10 ஆண்டு சிறை, 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். தீர்ப்பை தொடர்ந்து கோவை மத்திய சிறையில், முருகனை போலீசார் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us