ADDED : நவ 28, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போக்சோவில் தொழிலாளிக்கு சிறை
ஈரோடு, நவ. 28-
ஈரோடு, மல்லிகை நகரை சேர்ந்த கூலி தொழிலாளி சுப்பிரமணி, 55. இவர் ஈரோட்டை சேர்ந்த, 13 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் போக்சோவில் வழக்கு பதிந்தனர். போலீஸ் நடவடிக்கைக்கு பயந்து சுப்பிரமணி தலைமறைவானார். இந்நிலையில், மகளிர் போலீசார் சுப்பிரமணியை நேற்று கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.