ADDED : அக் 29, 2025 01:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்,
காங்கேயம் பரஞ்சேர்வழி வடுகபாளையத்தை சேர்ந்தவர் முருகன், 50; விவசாய கூலி தொழிலாளி. எக்ஸ்.எல்.சூப்பர் மொபட்டில் காங்கேயம் சென்னிமலை ரோடு, நால்ரோடு அருகே ஒரு பேக்கரிக்கு நேற்று மதியம் சென்றார்.
பேக்கரிக்கு செல்ல திரும்பியபோது எதிரே வந்த கியா கார் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். காரை ஓட்டி வந்த சுரேஷுக்கு, 45, கால் முறிவு ஏற்பட்டது. அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து காங்கேயம் போலீசார் விசாரிக்கின்றனர்.

