ADDED : டிச 03, 2024 02:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சரக்கு ஆட்டோ மோதி
தொழிலாளி பலி
கோபி, டிச. 2-
கோபி அருகே கொளப்பலுாரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 35, கூலி தொழிலாளி; நேற்று காலை, 6:30 மணிக்கு, டிஸ்கவர் பைக்கில், கோபி அருகே சில்லாமடை பிரிவு என்ற இடத்தில் சென்றார். எதிரே வந்த மேக்சிமோ பிக் அப் சரக்கு ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அவரின் தந்தை வெங்கடாசலபதி புகாரின்படி, சிறுவலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.