sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமையாளர் கைது

/

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமையாளர் கைது

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமையாளர் கைது

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமையாளர் கைது


ADDED : அக் 03, 2024 01:38 AM

Google News

ADDED : அக் 03, 2024 01:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுவர் இடிந்து தொழிலாளி பலி: கடை உரிமையாளர் கைது

ஈரோடு, அக். 3-

ஈரோடு, கனி மார்க்கெட் வணிக வளாக சுவர் இடிந்து தொழிலாளி பலியான சம்பவத்தில், கடை உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு, கனி மார்க்கெட் ஜவுளி வணிக வளாகம் நான்கு தளங்களில் செயல்படுகிறது. முதல் தளத்தில் ஈரோடு, செட்டிபாளையம் முருகேசன், 52, என்பவர் கடை எண்-194ஐ வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். சில நாட்களுக்கு முன்பு, பின்புறம் உள்ள மற்றொரு கடையை வாடகைக்கு எடுத்தார். இரு கடைகளையும் இணைத்து விரிவாக்கம் செய்ய, இடையே உள்ள தடுப்பு சுவரை இடித்து, ஒரே கடையாக மாற்ற திட்டமிட்டார்.

கடந்த, 30 அதிகாலை, 2:30 மணியளவில் சுவரை இடிக்கும் பணியில் கருங்கல்பாளையம் சுப்பிரமணி, 55, ஆனந்த், 45, ஆகியோர் பணி செய்தனர். அப்போது சுவர் இடிந்து இருவர் மீதும் விழுந்தது. இடிபாட்டில் சிக்கி சுப்பிரமணி இறந்தார். ஆனந்த் ஈரோடு அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வருகிறார்.

மாநகராட்சி கடையை வாடகைக்கு எடுத்த முருகேசன் மீது, அஜாக்கிரதையாக கட்டுமான பணி செய்தல், தொழிலாளியின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தது என, இரு பிரிவுகளின் கீழ் ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிந்து முருகேசனை கைது செய்தனர். ஈரோடு நீதிமன்ற உத்தரவுப்படி, கோபி மாவட்ட சிறையில் முருகேசனை அடைத்தனர்.

தவிர, வணிக வளாக கடையை வாடகைக்கு எடுத்த ஒப்பந்த விதியை மீறியதாகவும், கடையை சேதப்படுத்தியதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் போலீசில் புகார் செய்துள்ளனர். மேலும், கடையை சேதப்படுத்தியதற்காக, முருகேசனுக்கு மாநகராட்சி மூலம் அபராதம் விதித்து, கடை வாடகை ஒப்பந்தம் ரத்து செய்து, கடையை பறிமுதல் செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us