ADDED : ஆக 09, 2025 01:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அந்தியூர், அந்தியூர் அரசு மருத்துவமனையில், உலக தாய்ப்பால் வார விழா நடந்தது. அல்ட்ரா தொண்டு நிறுவன தலைவர் தண்டாயுதபாணி வரவேற்றார். டாக்டர் கவிதா, குழந்தை நல மருத்துவர்கள் அரவிந்தசாமி, சிவக்குமார் முன்னிலை வகித்தனர். மருத்துவ அலுவலர் பிரகாஷ் தலைமை வகித்து, தாய்ப்பாலின் மகத்துவம், முக்கியத்துவம் குறித்து கர்ப்பிணிகள், தாய்மார்களுக்கு விளக்கமளித்து பேசினார்.
இதில், அல்ட்ரா தொண்டு நிறுவனம் சார்பில், கர்ப்பிணிகள் மற்றும் பிரவித்த தாய்மார்கள், 20க்கும் மேற்பட்டோருக்கு, ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை தொகுப்பு வழங்கப்பட்டது. லயன்ஸ் கிளப் செயலர் ராஜேஷ், பொருளாளர் ஈஸ்வரன் மற்றும் பயிற்சி செவியர்கள், மருத்துவ பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

