ADDED : டிச 22, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நலத்திட்ட பணிக்கு பூஜை
தாராபுரம், டிச. 22-
தாராபுரத்தை அடுத்த தொப்பம்பட்டி ஊராட்சி சின்னிய கவுண்டன் பாளையத்தில், ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் முன்னிலையில், 77.89 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்ட, மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் கயல்விழி, நேற்று அடிக்கல் நாட்டினார். இதேபோல் நாரணாபுரம் பகுதியில், ஒன்றிய குழு துணைத் தலைவர் சசிகுமார், தி.மு.க., ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பாலு முன்னிலையில், 77.89 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டவும் பூஜை நடந்தது.