/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்
/
பாரியூர் அம்மனுக்கு மஞ்சள் நீர் உற்சவம்
ADDED : ஜன 16, 2025 06:28 AM
கோபி: கோபி, புதுப்பாளையம் பஜனை கோவிலுக்கு விஜயம் செய்த பாரியூர் கொண்டத்து காளியம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது.
கோபி அருகே பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில், நடப்பாண்டு குண்டம் திருவிழா, கடந்த, 9ம் தேதி நடந்தது. அதையடுத்து மலர் பல்லக்கில் ஊர்வலமாக வந்த அம்மனுக்கு, கோபியில் கடந்த, 12ல் தெப்போற்சவம் நடந்தது. பின்னர் கோபி, ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில், சாரதா மாரியம்மன் கோவிலுக்கு விஜயம் செய்த அம்மனுக்கு, கடந்த இரு நாட்களாக மஞ்சள் நீர் உற்சவம் நடந்தது. தொடர்ச்சியாக புதுப்பாளையம் பஜனை கோவிலுக்கு, விநாயகர் மற்றும் சூலவேலுடன் விஜயம் செய்த பாரியூர் அம்மனுக்கு, மஞ்சள் நீர் உற்சவம் நேற்று நடந்தது. பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால், அர்ச்சகர்கள் வேதமந்திரம் முழங்க, மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

