ADDED : மார் 02, 2026 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி; பவானி அருகே செலம்பகவுண்டன்பாளை-யத்தை சேர்ந்தவர் சேகர், 60; இவரின் மகன் கோகுல், 24; பவானியில் தனியார் நிறுவனம் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். வேலைக்கு சென்றவர் மாலையில் வீடு திரும்ப-வில்லை. சேகர் புகாரின்படி பவானி போலீசார், கோகுலை தேடி வருகின்றனர்.
* சித்தோடு அருகே பேட்டைகாட்டை சேர்ந்தவர் வெள்ளைகவுண்டன். இவரின் மகள் மோகனபி-ரியா, 19; தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவி. இரு தினங்களுக்கு முன் கல்லுாரி சென்றவர் வீடு திரும்பவில்லை. பெண்ணின் தந்தை புகாரின்படி, சித்தோடு போலீசார் தேடி வருகின்றனர்.

