/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வற்புறுத்திய நெ.2 கணவர் இளம்பெண் விபரீத முடிவு
/
வற்புறுத்திய நெ.2 கணவர் இளம்பெண் விபரீத முடிவு
ADDED : ஜூலை 15, 2025 01:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு கிருஷ்ணம்பாளையத்தை சேர்ந்தவர் பேபி ஷாலினி, 25; சேலம் மாவட்டம் ஓமலுார், எம்.ஓலப்பட்டியைச் சேர்ந்த சத்ரியன் என்பவரை காதலித்து, 2023ல் திருமணம் செய்து கொண்டார். கருத்து வேறுபாட்டால் பிரிந்து, வேலுாரை சேர்ந்த ராஜூ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். அவரையும், 10 நாளில் பிரிந்தார்.
பெற்றோர் வீட்டில் வசித்தார். ஒன்பது மாதங்களாக கேட்டரிங் வேலைக்கு சென்றார். இந்நிலையில் ராஜூ, தன்னுடன் வாழ வருமாறு, பேபி ஷாலினியை தொந்தரவு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்தவர், வீட்டில் துாக்கிட்டு கொண்டதில் இறந்தார். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

