ADDED : அக் 19, 2024 02:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியை சேர்ந்தவர் கார்த்தி, 23; இவர், 16 வயது பள்ளி மாணவியை, ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இருவர் வீட்டிலும் தேடியபோது அவினாசி அருகே இருவரும் சிக்கினர்.
விசாரணையில் சிறுமியிடம் கார்த்தி தவறாக நடந்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்த புகாரின்-படி காங்கேயம் மகளிர் போலீசார், போக்சோ வழக்கில் கார்த்-தியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

