ADDED : மார் 05, 2024 01:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு;மத்திய
அரசின் தவறான பொருளாதார கொள்கையால், வரலாறு காணாத வேலையின்மை,
விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ளது என்று கூறி, அனைத்திந்திய இளைஞர்
பெருமன்றத்தின் சார்பில், ஒரு கோடி மக்கள் சந்திப்பு என்ற பிரசார
இயக்கம், ஈரோடு மாநகரின் பல பகுதிகளில் நேற்று நடந்தது.
இ.கம்யூ.,
வட்டார செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க
மாநில துணைத்தலைவர் துளசிமணி, பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
இ.கம்யூ., தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன், மாவட்ட பொருளாளர் ரமணி,
மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் உள்ளிட்டோர் கலந்து
கொண்டனர்.

