/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்
/
கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர்
ADDED : ஆக 28, 2025 01:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபி அருகே கீழ்பவானி வாய்க்காலில் இறந்து கிடந்த வாலிபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கோபி அருகே வாய்க்கால்ரோட்டை சேர்ந்தவர் லலித்குமார், 21, வேன் டிரைவர்; இவர் கோபி அருகே வெள்ளாங்கோவில், கீழ்பவானி வாய்க்கால் தண்ணீரில் நேற்று காலை, 9:00 மணிக்கு மிதந்தபடி மயங்கி கிடந்தார். அவரது குடும்பத்தார், சம்பவ இடத்துக்கு விரைந்து, லலித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே இறந்தார். இதுகுறித்து தாய் காந்திமதி, 40, கொடுத்த புகாரின்படி, சிறுவலுார் போலீசார்
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

