/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தேர் கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர் இறப்பு
/
தேர் கவிழ்ந்த விபத்தில் சிக்கியவர் இறப்பு
ADDED : செப் 18, 2024 05:58 AM

சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே தேர் கவிழ்ந்த விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த சோழம்பட்டு காலனியை சேர்ந்தவர் முனியன் மகன் ராமச்சந்திரன், 50;கடந்த 8 ம் தேதி காலனி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் போது தேர் கவிழ்ந்தது. இதில் ராமச்சந்திரன் தேருக்கு அடியில் சிக்கி பலத்த காயமடைந்தார்.
உடனடியாக அவரை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து பின் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வந்த ராமச்சந்திரன் நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.