/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
/
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஆக 22, 2024 12:39 AM

சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பொய்க்குனம் கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் தாமரை மணாளன் தலைமை தாங்கினார்.ஒன்றிய குழுத் தலைவர் திலகவதி நாகராஜன்,அட்மா குழத் தலைவர் ஆறுமுகம், மாவட்ட கவுன்சிலர் சுகன்யா சுரேஷ் முன்னிலை வகித்தனர்.ஊராட்சித் தலைவர் அன்பு அன்பரசு வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். முகாமில் 1,200 மனுக்கள் பெறப்பட்டது.
தாசில்தார் சசிகலா,சமுக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபாலகிருஜ்ணன்,பி.டி.ஓ.,க்கள் மோகன் குமார்,செல்வ போதகர்,ஊராட்சித் தலைவர்கள், பொது மக்கள் பங்கேற்றனர்.