sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

/

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது

ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ADDED : மே 01, 2024 02:01 AM

Google News

ADDED : மே 01, 2024 02:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி, : வி.கூட்ரோடு புறவழிச்சாலையில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற 2 பேரை கைது செய்து, 1,350 கிலோ அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கள்ளக்குறிச்சி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு துறை சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் தலைமையில், போலீசார் சின்னசேலம் அருகே வி.கூட்ரோடு புறவழிச்சாலை பகுதியில் நேற்று மதியம் 12:30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக வந்த அசோக் லேலாண்ட் தோஸ்த் லோடு மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது தெரிந்தது.

விசாரணையில், ஆந்திரா மாநிலம், சித்துார் அடுத்த பாலமனேர் பகுதியைச் சேர்ந்த ரவி மகன் சதீஷ், 24; தம்பிகனிபள்ளியைச் சேர்ந்த மாதேஷ் மகன் விக்னேஷ், 28; என்பது தெரிந்தது.

மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசூர், மடப்பட்டு, கூவாகம், இருந்தை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதை புரோக்கர் மூலம் ஆந்திரா மாநிலம், பங்காரப்பேட்டையில் உள்ள தனியார் ரைஸ்மில்லுக்கு விற்பனை செய்ய எடுத்து சென்றதும் தெரியவந்தது. தொடர்ந்து, சதீஷ், விக்னேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

மேலும், தலா 50 கிலோ வீதம், 27 சாக்கு மூட்டைகளில் இருந்த, 1,350 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினி சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us