/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குறைதீர் கூட்டத்தில் 236 மனுக்கள் குவிந்தது
/
குறைதீர் கூட்டத்தில் 236 மனுக்கள் குவிந்தது
ADDED : செப் 17, 2024 05:56 AM

கள்ளக்குறிச்சி,: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 236 மனுக்கள் பெறப்பட்டது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பிரசாந்த் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.
இதில் வருவாய் துறை, நிலப்பட்டா குறைகள், நில அளவை, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைபட்டா, முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமை தொகை, கூட்டுறவு கடனுதவி, சாலை வசதி மற்றும் நலத்திட்ட உதவிகள் கோரி 236 மனுக்கள் பெறப்பட்டது.
மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
முன்னதாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தசைசிதைவு பாதிப்பு ஏற்பட்ட மாற்றுத்திறனாளிக்கு ரூ.15 ஆயிரம் மதிப்பில் பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.