ADDED : மே 10, 2024 01:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: காரனுார் கிராமத்தில் இடத்தகராறில் ஒருவரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
கச்சிராயபாளையம் அடுத்த காரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 51; குதிரைச்சந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் மனைவி நதியரசி, 31; இருவருக்குமிடையே இடம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
நேற்று முன்தினம் மாலை மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில், நதியரசி தனது கணவர் மற்றும் உறவினருடன் சேர்ந்து நாராயணனை தாக்கினார்.
புகாரின்பேரில், நதியரசி, சுப்ரமணியன், 40; நாராயணசாமி, 58; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.