sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

வரஞ்சரம் பகுதியில் குட்கா விற்ற 3 பேர் கைது

/

வரஞ்சரம் பகுதியில் குட்கா விற்ற 3 பேர் கைது

வரஞ்சரம் பகுதியில் குட்கா விற்ற 3 பேர் கைது

வரஞ்சரம் பகுதியில் குட்கா விற்ற 3 பேர் கைது


ADDED : செப் 01, 2024 11:02 PM

Google News

ADDED : செப் 01, 2024 11:02 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : வரஞ்சரம் அருகே வெவ்வேறு பகுதியில் குட்கா விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வரஞ்சரம் சப் - இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் எஸ்.ஒகையூர் பஸ்நிறுத்தம் பகுதியில் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, பைக்கில் வந்த சிலர் குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரிந்தது.

உடன் போலீசார், புதுஉச்சிமேடு கணேசன், 44; வேப்பூர் அடுத்த ப.கொத்தனுார் பழனிவேல், 48; ஆகிய இருவரையும் கைது செய்து 15 ஆயிரத்து 560 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்கள் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதில் தொடர்புடைய கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சரவணன் என்பவரை தேடி வருகின்றனர்.

அதேபோல், வரஞ்சரம் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் நடத்திய சோதனையில், கூத்தக்குடியைச் சேர்ந்த சொக்கலிங்கம், 55; என்பவரது கடையில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரிந்தது.

இதையடுத்து, சொக்கலிங்கத்தை கைது செய்து, 520 ரூபாய் மதிப்புள்ள குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us