sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரேஷன் அரிசி விற்ற 3 பேர் கைது

/

ரேஷன் அரிசி விற்ற 3 பேர் கைது

ரேஷன் அரிசி விற்ற 3 பேர் கைது

ரேஷன் அரிசி விற்ற 3 பேர் கைது


ADDED : செப் 05, 2024 06:55 AM

Google News

ADDED : செப் 05, 2024 06:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே ரேஷன்அரிசியை தனிநபருக்கு விற்பனை செய்த விவகாரத்தில், விற்பனையாளர் உட்பட 3 பேரை குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.

சின்னசேலம் அடுத்த பங்காரம் ரேஷன் கடையில் இருந்து ஆட்டோவில் அரிசி மூட்டைகள் கடத்தப்பட்டது. இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில், பொதுவிநியோக திட்ட மாவட்ட துணை பதிவாளர் சுரேஷ் மற்றும் அலுவலர்கள் பங்காரம் ரேஷன் கடையில் நேற்று முன்தினம் ஆய்வு செய்தனர்.

அதில் கடையின் விற்பனையாளர் சத்தியமூர்த்தி,54; அரிசி மூட்டைகளை தனி நபருக்கு விற்பனை செய்தது தெரிந்தது. இதையடுத்து, விற்பனையாளர் சத்தியமூர்த்தியை 'சஸ்பெண்ட்' செய்து கூட்டுறவு சார்பதிவாளர் கமலக்கண்ணன் உத்தரவிட்டார். மேலும், இது தொடர்பாக கள்ளக்குறிச்சி குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், இன்ஸ்பெக்டர் ேஹமலதா தலைமையிலான போலீசார், ரேஷன்கடை விற்பனையாளர் உலகங்காத்தானை சேர்ந்த ஆறுமுகம் மகன் சத்தியமூர்த்தி,54; அரிசி வாங்கிய கள்ளக்குறிச்சியை சேர்ந்த நாவன் மகன் சடையன்,55; ஆட்டோ உரிமையாளர் நீலமங்களத்தை சேர்ந்த வேலாயுதம் மகன் பச்சையப்பன்,40; ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட டிஎண்15 எம்1766 என்ற பதிவெண் கொண்ட ஆட்டோ, 300 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us