sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

/

கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது

கத்தியுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது


ADDED : மே 01, 2024 11:40 PM

Google News

ADDED : மே 01, 2024 11:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த எலவனாசூர்கோட்டை சப் இன்ஸ்பெக்டர் அரிகிருஷ்ணன் தலைமையில் உளுந்துார்பேட்டை போலீஸ் சந்தோஷ்குமார், திருநாவலுார் கோபால் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் கஞ்சா விற்பவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் உளுந்துார்பேட்டை கடை வீதியில் போலீசார் சென்றபோது, சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் உளுந்தூர்பேட்டை தாலுகா இலுப்பையூர் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் தேவா 18, மதியனுார் பகுதியை சேர்ந்த ராஜா மகன் தமிழரசன் 18, ராமலிங்கம் மகன் நிஷாந்த் 19 ஆகியோர் என தெரியவந்தது.மேலும் அவர்கள் இடுப்பில் கத்தியுடன் சுற்றி வந்தது தெரியவந்தது.

அதன் பேரில் கத்தியை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தேவா, தமிழரசன், நிஷாந்த் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us