நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், - திருக்கோவிலுாரில் பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுார், சப் இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, வடமருதுார் சுடுகாடு அருகே பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த சுந்தர், 39; லட்சுமணன், 37; பிச்சாண்டி, 40; தங்கமணி, 37; ஆகியோரை கைது செய்தனர்.
லாட்டரி சீட்டு விற்றவர் கைது
சந்தைப்பேட்டையில் லாட்டரி சீட்டு விற்ற அதே பகுதியைச் சேர்ந்த ஆதிமூலம், 57; என்பவரை கைது செய்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.