sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கூட்டு கொள்ளையடிக்க திட்டம் ஆயுதங்களுடன் 4 பேர் கைது

/

கூட்டு கொள்ளையடிக்க திட்டம் ஆயுதங்களுடன் 4 பேர் கைது

கூட்டு கொள்ளையடிக்க திட்டம் ஆயுதங்களுடன் 4 பேர் கைது

கூட்டு கொள்ளையடிக்க திட்டம் ஆயுதங்களுடன் 4 பேர் கைது


ADDED : மார் 05, 2025 05:21 AM

Google News

ADDED : மார் 05, 2025 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் கூட்டுக் கொள்ளையடிக்க பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் நேற்று அதிகாலை ரோந்துப்பணியில் ஈடுபட்ட அப்போது, மைலாம்பாறையில் ஆட்டோவில் சந்தேகப்படும்படி இருந்த நபர்களை பிடிக்க முயன்றபோது, தப்பியோடினர். போலீசார் அவர்களை துரத்திச் சென்றதில் 4 பேர் பிடிபட்டனர். 2 பேர் தப்பியோடினர்.

பிடிபட்டவர்களிடம் நடத்திய விசாரணையில், சங்கராபுரம் பகுதிகளில் கூட்டுக் கொள்ளையடிக்க திட்டமிட்டு ஆட்டோவில் செல்ல காத்திருந்தது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து, சங்கராபுரம் நாராயணன் மகன் ஆனந்தராசு, 44; கோவிந்தன் மகன் ராஜா, 27; சீர்காழி ராமலிங்கம் மகன் கார்த்திகேயன், 42; வடசேமபாளையம் உஸ்மான் அலி மகன் முகமது ரபிக், 36; ஆகிய 4 பேரை கைது செய்து வீச்சரிவாள், கத்தி, மற்றும் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும், தப்பியோடிய புதுச்சேரி, அரியாங்குப்பம் ராஜேஷ், வடசொரலுார் பன்னீர்செல்வம் ஆகியோரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us