sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு

/

பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு

பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு

பிரியாணி கடையில் தகராறு செய்தவர் மீது வழக்கு


ADDED : ஜூன் 12, 2024 07:18 AM

Google News

ADDED : ஜூன் 12, 2024 07:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அருகே பிரியாணி கடையில் ஏற்பட்ட சண்டையில் கடை ஊழியரை தாக்கியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

மணலூர்பேட்டை அடுத்த சொரையப்பட்டு கிராமத்தில் குமார் என்பவருக்கு சொந்தமான பிரியாணி கடை உள்ளது. இதில் மணலூர்பேட்டையைச் சேர்ந்த சவுரிமுத்து மகன் அந்தோணிகுருஸ், 28; வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு 9:30 மணி அளவில் அவரது கடைக்கு சென்ற சொரையப்பட்டை சேர்ந்த ராஜாமணி மகன் பன்னீர்செல்வம், 24; சாப்பாடு கேட்டுள்ளார். தீர்ந்து விட்டது எனக் கூறியதால், ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம் காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து அந்தோணிகுருஸ் கழுத்தில் வெட்டியதில் காயம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்தோணி குரூஸ் கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் பன்னீர்செல்வத்தின் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us