sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு

/

ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு

ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு

ரேஷன் கடைகளில் திடீர் ஆய்வு


ADDED : மே 26, 2024 06:09 AM

Google News

ADDED : மே 26, 2024 06:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

தமிழக அரசு ரேஷன் கடை மூலமாக அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய், கோதுமை உள்ளிட்ட அத்தியாவசிய பெருட்களை வழங்கி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 766 முழு நேர மற்றும் பகுதிநேர ரேஷன் கடைகள் உள்ளன.

நடப்பு மாதம் அதிகளவிலான விடுமுறை மற்றும் தாமதமான வரத்து உள்ளிட்ட காரணங்களால் அத்தியாவசிய பொருட்களை உரிய நேரத்தில் மக்களுக்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையொட்டி இன்று (26ம் தேதி) அனைத்து ரேஷன் கடைகளும் இயங்கும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரேஷன்கடைகளில் கூட்டுறவுத்துறை மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். கூட்டுறவு துறையில், சார்பதிவாளர் மற்றும் முதுநிலை ஆய்வாளர் மேற்பார்வையில் ஒரு ஒன்றியத்திற்கு 5 ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதேபோல், வருவாய்த்துறையில், வட்ட வழங்கல் அலுவலர் மேற்பார்வையில் ஒரு தாலுகாவிற்கு 7 கடைகள் வீதம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ரேஷன் கடைகள் சரியான நேரத்திற்கு திறக்கப்படுகிறதா, அத்தியாவசிய பொருட்கள் சரியான அளவில் வழங்கப்படுகிறதா, எடை போடும் தராசின் தரம், ரேஷன் கடைகளில் இருப்பில் உள்ள பொருட்கள் சரியான அளவில் உள்ளதா, கடையின் சுத்தம் உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து நேற்று ஆய்வு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us