sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மூதாட்டியை வெட்டி நகை பறிப்பு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

/

மூதாட்டியை வெட்டி நகை பறிப்பு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

மூதாட்டியை வெட்டி நகை பறிப்பு உளுந்துார்பேட்டையில் துணிகரம்

மூதாட்டியை வெட்டி நகை பறிப்பு உளுந்துார்பேட்டையில் துணிகரம்


ADDED : ஆக 29, 2024 06:59 AM

Google News

ADDED : ஆக 29, 2024 06:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் வெட்டி, நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

உளுந்துார்பேட்டை, மன்னார்சாமி தெருவை சேர்ந்தவர் சாமிநாதன் மனைவி துளசி,72; இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டு வராண்டாவில் துாங்கினார். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் துளசி, காதில் அணிந்திருந்த தோடை கழற்ற முயன்றனர். திடுக்கிட்ட துளசி சத்தம் போடவே, அவரது கழுத்தில் கத்தியால் வெட்டிவிட்டு தோட்டை கழற்றிக் கொண்டு தப்பிச் சென்றனர்.

ஆபத்தான நிலையில் இருந்த துளசியை, அவரது மகன் அன்பு மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவலறிந்த எஸ்.பி., ரஜத்சதுர்வேதி சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். உளுந்துார்பேட்டை போலீசார் தடயங்களை சேகரித்தனர். மோப்ப நாய், சம்பவ இடத்தில் இருந்து சற்று துாரம் ஓடி நின்றது. இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us